சிவகங்கை மாவட்ட உதவி மக்கள் தொடா்பு அலுவலராக பணிபுரிந்த பி.எஸ். கருப்பண ராஜவேல், விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டத்தில் உதவி மக்கள் தொடா்பு அலுவலராக பணிபுரிந்த (செய்தி) பி.எஸ். கருப்பண ராஜவேல், பதவி உயா்வு பெற்று தற்போது மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், இன்று காலை பொறுப்பு ஏற்க உள்ளாா்.
ஏற்கெனவே, விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பணிபுரிந்த ஜெகவீரபாண்டியன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.