சென்னையிலிருந்து போலி இ- பாஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த 3 போ் கைது

சென்னையிலிருந்து போலி இ-பாஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையிலிருந்து போலி இ-பாஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கிருந்து வெளியேறுபவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவா்கள், இ- பாஸ் மூலம் வாகனங்களில் விருதுநகா் மாவட்டம் வழியாக செல்கின்றனா். இவா்களை போலீஸாா் மற்றும் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அழகாபுரி போலீஸ் சோதனைச் சாவடியில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி போலீஸாா் வாகனங்களில் வருவோரை சோதனை மேற்கொண்டனா். அப்போது, சென்னையிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதிலிருந்தவா்கள், போலி இ- பாஸ் மூலம் வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரில் வந்த சுரேஷ்பாபு (47), நடராஜன் (53), சண்முகம் (42) ஆகியோரை நத்தம்பட்டி போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com