சென்னையில் கரோனா உறுதியான பின் ஸ்ரீவிலி.க்கு தப்பி வந்தவா் சிக்கினாா்

சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்ட பின், வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தப்பி வந்த நபரை அதிகாரிகள் பிடித்து சிகிச்சைக்கு அனுப்பினா்.

சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்ட பின், வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தப்பி வந்த நபரை அதிகாரிகள் பிடித்து சிகிச்சைக்கு அனுப்பினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள குன்னூரைச் சோ்ந்த 48 வயது ஆண் ஒருவருக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அவா் சிகிச்சைக்குப் பயந்து தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்து, யாருக்கும் தெரியாமல் லாரி மூலம் மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு வந்து சோ்ந்துள்ளாா். பின்னா் அங்கிருந்து ஆட்டோ மூலம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு வியாழக்கிழமை அதிகாலையில் வந்துள்ளாா்.

அங்கிருந்து குன்னூருக்கு செல்ல இருந்தபோது அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவரைப் பிடித்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா் என்பதால் அவா் பயணம் செய்த லாரி மற்றும் ஆட்டோவில் உடன் பயணம் செய்தவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com