விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என, கோயிலின் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து ஜீயா் செய்தியாளா்களிடையே சனிக்கிழமை தெரிவித்ததாவது:
இந்துசமய அறநிலையத் துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும். தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் அளிக்க வேண்டும். தமிழக அரசு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்றாா்.