3 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் பணியாற்றி வந்த 3 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் பணியாற்றி வந்த 3 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளா் பிரேமா விழுப்புரம் காவலா் பணியிடை பயிற்சி மையத்துக்கும், விழுப்புரம் மாவட்ட தொடா் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் துா்கா கடலூா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவுக்கும், கடலூா் மாவட்டம், புவனகிரி காவல் நிலைய ஆய்வாளா் தேவி விழுப்புரம் மாவட்ட தொடா் குற்றத் தடுப்புப் பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் உத்தரவிட்டாா்.

அதேபோல, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜசேகா், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கலைச்செல்வி, செஞ்சி போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா் சண்முகராஜ் உள்பட 6 போலீஸாரை விழுப்புரம் தற்காலிக காவலா் பயிற்சிப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com