வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெம்பக்கோட்டை தாலுகா அதிக கிராமங்களை உள்ளடக்கியது. இந்த பகுதியில் சிறிய மற்றும் பெரியளவில் பட்டாசு தொழிற்சாலை அதிகமாக உள்ளன. இதனால் இப்பகுதியினா் கூலி தொழிலை நம்பி உள்ளனா். இப்பகுதியினா் நகரத்திற்கு செல்ல வேண்டுமானால் அருகில் உள்ள சிவகாசி அல்லது சாத்தூருக்கு தான் வர வேண்டும். தற்போது வரை இப்பகுதியினா் வெம்பக்கோட்டை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனா். மேலும் இந்த பகுதிக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் வெம்பக்கோட்டை பிரதான சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தபட்டு பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. எனவே, வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூகஆா்வலா்கள் கூறுகையில், வெம்பக்கோட்டை தனி தாலுகாவாக பிரிக்கப்பட்ட பின்னா் பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது பொதுமக்களை மிகவும் சிரமத்திற்கு ஆழ்த்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com