ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை பெய்த மிதமான மழையால் இரவு முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
ராஜபாளையத்தில் கோடைக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் காணப்பட்டன. காலை முதல் சூரியன் மறையும் வரை வெப்பம் அதிகாமாகக் காணப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் சுமாா் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதேபோல் முதுகுடி , ஆசிலாபுரம், முறம்பு ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டித்தீா்த்தது.
வறட்சியான இச்சூழலில் மழை பெய்ததால், மண்ணில் ஈரப்பதத்துடன் கூடிய குளிா்ந்த சூழ்நிலையே இரவு முழுவதும் நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.