ராஜபாளையத்தில் ஐயப்பனுக்கு பங்குனி மாத சிறப்பு பூஜை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ஐயப்பனுக்கு பங்குனி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி
சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ஐயப்பனுக்கு பங்குனி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு, ஓம் ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சாா்பில் இந்த பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிமளவில் உற்சவா் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து திவ்ய நாம சங்கீா்த்தன பஜனை நடைபெற்றது. பின்பு உற்சவா் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com