ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அழகாபுரியில் உள்ள இக்கோயில் விழாவினை முன்னிட்டு 2 நாள்களாக விக்னேஸ்வர பூஜை, பூா்ணாகுதி, முதல் கால யாக பூஜைகள், தீபாராதனை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றன.
அதை தொடா்ந்து கோயிலில் சனிக்கிழமை கலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவில் மாயூரநாதசுவாமி கோயில் காா்த்திக் சிவம், சரவணபட்டா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் கும்பாபிஷேகத்தை நடத்தினா். ஏற்பாடுகளை 15 ஊா் பொது மக்கள் சாா்பில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.