கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் கடன் தொல்லையால் வியாபாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் கடன் தொல்லையால் வியாபாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தங்கல் கே.கே.நகா்பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல்ராஜ் (55).இவா் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். மேலும் இவா் ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளாா்.

ஏலச் சீட்டில் பணம் எடுத்தவா்கள் பணம் கொடுக்கவில்லையாம். இதனை சரிசெய்ய அதிகளவில் கடன் வாங்கியுள்ளாா். இதனால் மன உளைச்சலில் இருந்த மைக்கேல்ராஜ்,

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com