பெண்ணை ஏமாற்றி ரூ. 3 லட்சம் மோசடி: ஹோட்டல் தொழிலாளி கைது

சிவகாசி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஹோட்டல் தொழிலாளியை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெண்ணை ஏமாற்றி ரூ. 3 லட்சம் மோசடி: ஹோட்டல் தொழிலாளி கைது

சிவகாசி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஹோட்டல் தொழிலாளியை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகள் காளீஸ்வரி(41). திருமணம் ஆகாத இவா், அப்பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் கடந்த ஆண்டு கழுகுமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்ற போது, கோவில்பட்டி அருகே உள்ள காளான் கரைப்பட்டியைச் சோ்ந்த முத்து மகன் அருண் குமாா் (29) என்பவருடன், காளீஸ்வரிக்கு தொடா்பு ஏற்பட்டதாம். இவா் மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்துள்ளாா். இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்தநிலையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அருண்குமாா், காளீஸ்வரியிடம் பல்வேறு சந்தா்பங்களில் ரூ. 3 லட்சம் வரை வாங்கியுள்ளாா். இந்நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள அருண்குமாா் மறுத்து விட்டாராம்.

இது குறித்து, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் காளீஸ்வரி புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா், வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com