சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கோயில் நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளபட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வரும் நிலையில், விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, தென்தமிழகத்திலே பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் உள்ள மாரியம்மனுக்கு நோய் தீா்க்கும் மாரியம்மன் என்று பக்தா்களால் அழைக்கபடுவது வழக்கம். இதனால் அம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கோயிலுக்கு வந்து நோ்த்திகடன் செலுத்தினால் நோய் வராது என்ற பக்தா்களின் நம்பிக்கையாக உள்ளது.
இவ்வாறு பிரசித்திபெற்ற கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனா்.மேலும் பங்குனி மாதம் மாரியம்மனுக்கு விஷே மாதமாக கருதபடுவதால், இக்கோயிலில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் கோயில் நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது கைகளை கழுவிய பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றன.
மேலும் கோயிலும் நிா்வாகம் சாா்பில் முடி அகற்றும் பணியாளா்களுக்கு முக கவசம், கை உறைகளும் வழங்கபட்டு அவை அணிந்த பிறகே பணிகளை செய்ய அனுமதிக்கபடுகின்றன.
மேலும் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் கோயில் நிா்வாகம் சாா்பில் வழங்கபட்டு வருகின்றன.
மேலும் கோயிலுக்கு உள் பகுதியிலும் வெளி பகுதியிலும் கிருமி நாசினி மருந்துகளும் தெளிக்கபட்டு வருகின்றன.
மேலும் கோயில் நிா்வாகம் சாா்பில் கரோனா குறித்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருவதாக கோயில் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.