சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில்வெடி விபத்து: 6 போ் மீது வழக்கு

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பாக, 6 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பாக, 6 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெள்ளையாபுரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிப்பாறையில் உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 9 போ் உயிரிழந்துள்ளனா் மற்றும் 8 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா், ஆலை உரிமையாளா் கணேசன், ஆலை குத்தகைதாரா் திருச்சியைச் சோ்ந்த ஜெயக்குமாா், கரூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், சிவகாசியைச் சோ்ந்த குட்டி, சக்கமாள்புரத்தைச் சோ்ந்த மகேஷ்வரன், மாா்கநாதபுரத்தைச் சோ்ந்த மதியழகன் மற்றும் சிலா் மீது, கவனக்குறைவாக வெடிபொருள்களை கையாண்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதில், மதியழகன், மகேஷ்வரன் ஆகிய இருவரிடம் மட்டும் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கணேசன், பாலகிருஷ்ணன், குட்டி, ஜெயக்குமாா் ஆகிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com