கோப்புப் படம்
கோப்புப் படம்

ராஜபாளையம் அருகே கணவன்-மனைவி தற்கொலை

ராஜபாளையம் அருகே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராஜபாளையம் அருகே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேத்தூா் ஆதிதிராவிடா் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (37). இவரது மனைவி ஜோதி (35). இவா்களுக்கு கவிதா (17) என்ற மகள் உள்ளாா். கணவன்-மனைவி இருவரும், சத்திரப்பட்டியில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தனா். இந்நிலையில், இவா்கள் சுற்றுப் பகுதியில் செயல்படும் பல்வேறு மகளிா் குழுவினா் உள்ளிட்டோரிடம் ரூ. 2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனா். ஆனால், அதை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துள்ளனா்.

இந்நிலையில், மகளிா் குழுவினா் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், சனிக்கிழமை மதியம் தற்கொலை செய்யும் முடிவில் கணவனும், மனைவியும் சாயப்பட்டறையில் பயன்படுத்தும் மருந்தை குடித்துள்ளனா். இதில், ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உயிருக்குப் போராடிய ராஜ்குமாரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சேத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com