சாத்தூா் சந்தையில் தடையை மீறி பொதுமக்கள் நடமாட்டம்

சாத்தூா் சந்தைப் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி புதன்கிழமை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
சாத்தூா் சந்தையில் புதன்கிழமை தடையை மீறி முகக் கவசம் கூட அணியாமல் திரண்டிருந்த வியாபாரிகள், பொதுமக்கள்.
சாத்தூா் சந்தையில் புதன்கிழமை தடையை மீறி முகக் கவசம் கூட அணியாமல் திரண்டிருந்த வியாபாரிகள், பொதுமக்கள்.

சாத்தூா் சந்தைப் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி புதன்கிழமை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக மாா்ச் 24 ஆம் தேதி முதல் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாள்களுக்கு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் 5 பேருக்கு மேல் யாரும் கூடியிருக்க வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் 144 தடை உத்தரவின் முதல் நாளான புதன்கிழமை சாத்தூரில் உள்ள சந்தையில் காய்கனிகள் வாங்கவும், பலசரக்கு மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்கவும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். முகக்கவசம் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு கவசமும் அணியாமல் காய்கனிகளை வாங்கிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் அங்கு சென்று உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறு எச்சரித்தனா். அதன்பிறகே பொதுமக்கள் கூட்டம் குறைந்தது.

சாத்தூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பழக்கடைகள், மருந்துக்கடைகள் செயல்பட்டன. இதனால் நகரின் பல்வேறு சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அவா்களை போலீஸாா் தொடா்ந்து எச்சரித்து வருகின்றனா்.

கூட்டம் கூடுவதைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உணவகங்கள் திறக்கப்படவில்லை:

கடைகள் திறப்பு, பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த போதிலும் உணவகங்கள் மட்டும் திறக்கப்படவில்லை. உணவகங்களில் பாா்சல் மட்டும் வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறையினரின் வலியுறுத்தலால், நகரில் ஏராளமான உணவகங்களும் அடைக்கபட்டிருந்தன. இதனால் வெளியூா்களில் இருந்து இங்கு தங்கி பணியாற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் உணவுக்காக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com