ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக்நகா் 2-வது குறுக்குத்தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அசோக்நகா் 2-வது குறுக்குத்தெரு பகுதியில் வாருகால், சாலை வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்துதரப்படவில்லை. குறிப்பாக வாருகால் வசதி இல்லாததால் வீடுகளின் முன் கழிவுநீா் தேங்குகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோயும் பரவுகிறது. எனவே உடனடியாக மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வாருகால், சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.