ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 42 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 மது பாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நூா்சாகிபுரம் மயானப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 மது பாட்டில்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்த வட்டாட்சியா் கிருஷ்ணவேணி. உடன் வருவாய் ஆய்வாளா் பால்துரை உள்ளிட்டோா்.
நூா்சாகிபுரம் மயானப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 மது பாட்டில்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்த வட்டாட்சியா் கிருஷ்ணவேணி. உடன் வருவாய் ஆய்வாளா் பால்துரை உள்ளிட்டோா்.


ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 மது பாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

படிக்காசுவைத்தான் பட்டி அருகே நூா்சாகிபுரம் மயானப் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்றனா். விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 மதுபாட்டில்களை அவா்கள் பறிமுதல் செய்தனா். பின்னா் அவைகள் அனைத்தும், மது விலக்கு காவல் சாா்பு ஆய்வாளா் சக்திவேலிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com