ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரின் முக்கிய சாலைகளை, போலீஸாா் தடுப்புகள் அமைத்து அடைத்துள்ளனா்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோதிலும் பொதுமக்கள் அவ்வப்போது சாலைகளில் நடமாடி வருகின்றனா். இதைத் தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், மணிக்கூண்டு, நகைக்கடை பஜாரின் இருபுறம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் போலீஸாா் வியாழக்கிழமை தடுப்புகள் அமைத்துள்ளனா். தொடா்ந்து, இருசக்கர வாகனங்களில் வருவோரை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். முக்கியத் தேவை இருந்தால் மட்டுமே முகக் கவசம் அணிந்து வெளியே வர அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா்.