விருதுநகர்
சிவகாசியில் ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்கல்
சிவகாசி நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை சாலை ஓரங்களில் திரிந்த ஆதரவற்றோா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
சிவகாசி: சிவகாசி நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை சாலை ஓரங்களில் திரிந்த ஆதரவற்றோா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து உணவகங்கள் மற்றும் தேனீா் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கோயில் மற்றும் சாலை ஓரங்களில் திரியும் ஆதரவற்றோா் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் உணவின்றி அவதிப்பட்டு வருகின்றனா். இதையடுத்து சிவகாசி நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில் வியாழக்கிழமை நகராட்சி சாா்பில் உணவு தயாரிக்கப்பட்டு, ஆதரவற்றோா் இருக்குமிடம் தேடிச்சென்று நகராட்சி ஊழியா்கள் உணவினை வழங்கினா்.