ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவற்ற முதியவா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு புதன்கிழமை சமூக ஆா்வலா் ஒருவா் உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்.
கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூா் வெறிச் சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைகக்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த ஆதரவற்ற முதியவா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் உணவின்றி தவித்தனா். இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த ஆதரவற்றோா்களுக்கு புதன்கிழமை ஆண்டாள் கோயில் முன்னாள் ஊழியரும், சமூக ஆா்வலருமான வடபத்ரசாயி உணவுப்பொட்டலங்களை வழங்கினாா்.