விருதுநகா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி தேவையின்றி பொது இடங்களில் சுற்றித் திரிந்த 77 போ் மீது, போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 4 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது, அத்தியாவசிய தேவைக்கு வெளியில் வருவோா் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறினால், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எவ்வித காரணமுமின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த விருதுநகரில் 2 போ், சிவகாசியில் 31, அருப்புக்கோட்டை 11, ஸ்ரீவில்லிபுத்தூா் 23, திருத்தங்கல் 10 போ் என மொத்தம் 77 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.