அருப்புக்கோட்டையில் ஏழைகளுக்கு இலவச மளிகைப் பொருள்கள், காய்கனிகளை முன்னாள் ராணுவத்தினா் முன்னேற்ற சங்கத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.
அருப்புக்கோட்டையிலுள்ள ஏழைக்குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள், காய்கனிகள் வழங்கப்பட்டன. இதில் சங்கத் தலைவா் வீராச்சாமி, செயலா் சுகுமாா், துணைத் தலைவா் சந்திரசேகா், உறுப்பினா்கள் வெங்கடசாமி, மாடசாமி, பிரபாகரன், கணேசன், இளங்கோ, சதீஷ்குமாா், சுப்புராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.