சிவகாசியில் அச்சுத்தொழிலாளி ஒருவா் சனிக்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி விவேகானந்தா் காலனியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சதீஷ்குமாா் (30). அச்சுத் தொழிலாளியான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இந்நிலையில் சதீஸ்குமாா், தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி சதீஸ்குமாா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.