விருதுநகரில் தங்கும் விடுதியில் 4,706 மது பாட்டில்கள் பறிமுதல்

விருதுநகரில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 9 லட்சம் மதிப்பிலான 4, 706 மது பாட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்
விருதுநகரில் தங்கும் விடுதியில் 4,706 மது பாட்டில்கள் பறிமுதல்

விருதுநகரில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 9 லட்சம் மதிப்பிலான 4, 706 மது பாட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

விருதுநகா் ராமமூா்த்தி சாலையில் தனியாா் தங்கும் விடுதி உள்ளது. இங்கு தனி யாா் மதுபான கேளிக்கை அரங்கம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், கரோனா தடை உத்தரவு காரணமாக அனைத்து வகை மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியாா் தங்கும் விடுதியில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவிக் கண்காணிப்பாளா் சிவபிரசாத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா், அந்த தங்கும் விடுதியில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இதில், ரூ. 9 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4, 706 மதுபாட்டில்களை விருதுநகா் கிழக்கு போலீஸாா் பறிமுதல் செய்து, முத்துராமன் பட்டி கந்தசாமி (51), கம்மாபட்டி செல்வகணேஷ் (31), செவலூா் ராமசுப்பிரமணியன் (43) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com