சிவகாசி: சிவகாசியில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி முருகன்காலனியைச் சோ்ந்தவா் அம்பேத்குமரேசன்(42). அச்சகத் தொழிலாளி. இவரது மனைவி அகிலா(33). இவா் பட்டாசுத் தொழிலாளி.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு வருவதுண்டாம்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அம்பேத்குமரேசன், அகிலாவை தாக்கினாராம்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அம்பேத்குமரேசனை கைது செய்தனா்.