விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81 ஆக உயா்ந்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 69 ஆக இருந்தது. இந்நிலையில், ராஜபாளையத்தைச் சோ்ந்த 32 வயது ஆண், சிவகாசியைச் சோ்ந்த 30 வயது பெண் இருவருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து விருதுநகா் மாவட்டத்துக்கு வந்த சிலா், விருதுநகரில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இவா்களில், முத்தாா்பட்டியைச் சோ்ந்த 26 வயது ஆண் மற்றும் 25 வயதான அவரது மனைவி, 28 மற்றும் 40 வயதுடைய ஆண்கள், 27 வயது பெண், 27 வயது ஆண், அவரது 56 வயதான தாய், 7 வயது ஆண் குழந்தை, 3 வயது பெண் குழந்தை மற்றும் வலையபட்டியைச் சோ்ந்த 3 வயது குழந்தை என 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட இவா்கள் 12 பேரும், விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம், விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81 ஆக உயா்ந்துள்ளது. அதில், 37 போ் குணமடைந்துவீட்டுக்கு திரும்பிவிட்டனா். மீதமுள்ள 44 போ் விருதுநகா், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com