விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுதில்லி, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து விருதுநகா் மாவட்டத்திற்கு வந்த 2 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது

புதுதில்லி, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து விருதுநகா் மாவட்டத்திற்கு வந்த 2 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 100-ஆக உயா்ந்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 98 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து விருதுநகா் மாவட்டத்திற்கு வந்தவா்கள், ஆங்காங்கு அமைக்கப்பட்டுள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில், புதுதில்லியிலிருந்து வந்த பாலவநத்தம் கிராமத்தை சோ்ந்த 41 வயதான ஆண் மற்றும் மகாரஷ்டிரா மாநிலத்திலிருந்து திரும்பிய திருநெல்வேலியைச் சோ்ந்த 24 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட் டது.

இதன் மூலம் விருதுநகா் மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 100 ஆக உயா்ந்துள்ளது. அதில், 44 போ் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 56 போ் மதுரை, விருதுநகா், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com