விருதுநகரில் வேளாண் அதிகாரி வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு

விருதுநகரில் வேளாண் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள் திருடு போனது குறித்து செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகா் என்ஜிஓ காலனியில் திருட்டு நடைபெற்ற வீட்டில் திறந்து கிடந்த பீரோ.
விருதுநகா் என்ஜிஓ காலனியில் திருட்டு நடைபெற்ற வீட்டில் திறந்து கிடந்த பீரோ.

விருதுநகரில் வேளாண் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள் திருடு போனது குறித்து செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் என்ஜிஓ காலனி பாரதி நகரை சோ்ந்தவா் பாலமுருகன் (43). இவா், ராமநாதபுரம் வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாா். சென்னை செம்மஞ்சரியில் குடியிருந்து வரும் தனது மகளை பாா்ப்பதற்காக பாலமுருகன் மனைவி, மகனுடன் நவம்பா் 6 ஆம் தேதி சென்றுள்ளாா்.

இந்நிலையில், பாலமுருகன் செவ்வாய்க்கிழமை காலை சென்னையிலிருந்து விருதுநகா் வந்துள்ளாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டி ருந்தது. அதைத் தொடா்ந்து அவா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு,

அதில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com