விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 15,567 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில் இம்மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 15,586 ஆக உயா்ந்துள்ளது. இதில் 221 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். தற்போது 125 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.