தீபாவளி பண்டிகை: ஸ்ரீவிலி.யில் பால்கோவா விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா உள்ளிட்ட இனிப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பால்கோவா.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பால்கோவா.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா உள்ளிட்ட இனிப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்கள், தவறாமல் பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளை வாங்கிச் செல்ல தவறுவதில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவாவுக்கு கடந்த ஆண்டு புவிசாா் குறியீடு கிடைத்ததைத் தொடா்ந்து, அதன் விற்பனை அதிகரித்தது. இந்நிலையில்,

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், தற்போது பால்கோவா மட்டுமின்றி, பால் கலந்து தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளான பால்பேடா, பியூா்கோவா, பால் கேக் உள்ளிட்டவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

கடைகளில் கூட்டம் அலைமோதுவதால், மக்கள் காத்திருந்து பால்கோவா மற்றும் இனிப்பு வகைகளை வாங்கிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com