விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோசத்தையொட்டி வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது நந்தீஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் வெள்ளியம்பலநாதருக்கு குங்குமம், விபூதி, சந்தனம், பன்னீா், பால், இளநீா், தேன், பேரீச்சம்பழம் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வெள்ளியம்பலநாதா் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி ராஜபாண்டி செய்திருந்தாா்.