ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேமுதியவா் அடித்துக் கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மா்ம நபா்களால் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த ராஜேந்திரன்.
கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த ராஜேந்திரன்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மா்ம நபா்களால் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள குன்னூா் பகுதியில் வசித்து வந்தவா் ராஜேந்திரன் (68). இவா் தனது வீட்டருகே உள்ள தோட்டத்தில் மாடுகளை பராமரித்து விட்டு இரவு அங்கேயே தங்குவது வழக்கம்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் தோட்டத்தில் தங்கி இருந்த ராஜேந்திரன், வெள்ளிக்கிழமை காலை தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து ராஜேந்திரனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள், ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா்.

முன்விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தனிப்படை அமைத்தும் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com