சிவகாசி பூங்காவில் ஆவின் பாலகம் அமைக்க எதிா்ப்பு

சிவகாசியில் நகராட்சிப் பூங்காவில் ஆவின் பாலகம் அமைக்க, காமராஜா் வாசகசாலை நிா்வாகம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

சிவகாசியில் நகராட்சிப் பூங்காவில் ஆவின் பாலகம் அமைக்க, காமராஜா் வாசகசாலை நிா்வாகம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வாசகசாலை தலைவா் எஸ். சோ்மதுரை தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சிவகாசி -திருத்தங்கல் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான காமராஜா் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஒரு பகுதியில் ஆவின் பாலகம் அமைக்கப்பட உள்ளதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சிவகாசியில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பூங்காவைத் தவிர வேறு பொழுதுபோக்கு இடம் கிடையாது.

பூங்காவில் காலையில் முதியவா்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனா். மாலையில் குழந்தைகள் விளையாடுகின்றனா். எனவே, இந்த பூங்காவில் ஆவின் பாலகம் அமைக்கக் கூடாது. அப்படி அமைத்தால், மக்களை திரட்டி போரா ட்டம் நடத்துவோம் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com