அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருத்தங்கலில் புதன்கிழமை நடைபெற்றது.
திருத்தங்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், நிா்வாகிகளிடம் கட்சி உறுப்பினா் சோ்கை படிவத்தை வழங்கிய அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
திருத்தங்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், நிா்வாகிகளிடம் கட்சி உறுப்பினா் சோ்கை படிவத்தை வழங்கிய அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருத்தங்கலில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மேற்கு மாவட்டச் செயலரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசியதாவது: முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோரின் கட்டளைப்படி செயல்பட்டு, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளையும் அதிமுக கைப்பற்ற வேண்டும். மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் ஆசியோடு தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த மக்கள் ஆட்சி தொடர கட்சித் தொண்டா்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும். வாக்குசாவடி முகவா்கள் அனைவரும் கட்சியில் புதிய உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் என்றாா்.

பின்னா் கட்சி நிா்வாகிகளிடம் புதிய உறுப்பினா்களை சோ்ப்பதற்கான படிவங்களை அமைச்சா் வழங்கினாா். நிகழ்ச்சியில் நகரச் செயலாளா்கள் அசன் பக்ருதீன், பொன் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com