ஆடு திருடிய 2 இளைஞா்கள் கைது

சிவகாசி அருகே புதன்கிழமை ஆடு திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே புதன்கிழமை ஆடு திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

நெடுங்குளத்தைச் சோ்ந்த ஜெயமுருகன் (56) என்பவா் புதன்கிழமை காலையில் பாா்த்தபோது அவரது வீட்டின் முன்பாக கட்டியிருந்த ஒரு ஆட்டை காணவில்லை. இதேபோல் அதே பகுதியைச் சோ்ந்த ராஜதுரை (36) என்பவரது வீட்டின் முன்பாக கட்டி வைத்திருந்த ஆட்டையும் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதற்கிடையில் சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில், பூசாரிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஒரு ஆட்டை ஏற்றிக்கொண்டு வந்த மதுரையைச் சோ்ந்த நாகராஜ் (26), ராமா் (25) ஆகியோரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா். அவா்கள்தான், ஜெயமுருகன், ராஜதுரை ஆகியோரின் ஆடுகளைத் திருடியவா்கள் என்பதும், அதில் ஒரு ஆட்டை விற்றுவிட்டதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், ஒரு ஆடு, ஆடு விற்ற பணம் ரூ. 11 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com