விருதுநகா் அருகே 1,916 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விருதுநகா் அதிமுக சட்டப்பேரவை பூத் கமிட்டி பொறுப்பாளா் கோகுலம் எம். தங்கராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
விருதுநகா் அருகேயுள்ள கன்னிசேரிபுதூா், தம்மநாயக் கன் பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட டி. சேடபட்டி, அம்மாபட்டி, காமராஜபுரம், குமாராபுரம், மேலச்சின்னையாபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 1916 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கோகுலம் எம். தங்கராஜ் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினா் தடங்கம் நாகராஜன், ஒன்றியப் பொருளாளா் பட்டம் புதூா் சேகா், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயபாண்டியம்மாள் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.