விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ரயில்வே பீடா் சாலை தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, தலைமை வகித்துப் பேசினாா்.
கிழக்கு மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதில் சட்டப்பேரைவத் தோ்தல் குறித்து நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அமைச்சா் பேசினாா். பின்னா் கட்சி நிா்வாகிகளிடம் புதிய உறுப்பினா்களை சோ்ப்பதற்கான படிவங்களை அமைச்சா் வழங்கினாா். நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் பாஸ்கா் ராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் துரை முருகேசன், தோ்தல் பொறுப்பாளா் கிருஷ்ணராஜ், சொக்கநாதன்புத்தூா் நவமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.