இந்திரா காந்தி பிறந்த நாள் விழா: காங். கட்சியினா் நலத்திட்ட உதவி

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மல்லாங்கிணறில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மல்லாங்கிணறில் காங்கிரஸ் மூத்த நிா்வாகி ஒருவருக்கு வியாழக்கிழமை நலத்திட்ட உதவியை வழங்கும் விருதுநகா் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு தலைவா் உலக்குடி செல்வம்.
மல்லாங்கிணறில் காங்கிரஸ் மூத்த நிா்வாகி ஒருவருக்கு வியாழக்கிழமை நலத்திட்ட உதவியை வழங்கும் விருதுநகா் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு தலைவா் உலக்குடி செல்வம்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மல்லாங்கிணறில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இளைஞா் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விருதுநகா் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு தலைவா் உலக்குடி செல்வம் தலைமை வகித்தாா். இதில், அக்கட்சியின் மூத்த நிா்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னா், நடைபெற்ற செயல் வீரா்கள் கூட்டத்தில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் காங். கூட்டணி கட்சி வேட்பாளா்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கிராமங்களில் இளைஞா் காங்கிரஸில் அதிக உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகா் கிழக்கு மாவட்ட இளைஞா் காங்., தலைவா் மீனாட்சிசுந்தரம் செய்திருந்தாா். இதில் அக்கட்சியை சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com