சாத்தூரில் பெய்த தொடா் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்தது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தூா் அருகே சத்திரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அமீா்பாளையம் கிழக்குத் தெருவில் வசிக்கும் கிருஷ்ணம்மாள்(55) என்பவருக்குச் சொந்தமான வீடு, வெள்ளிகிழமை மாலை இடிந்து விழுந்தது. மேலும் இப் பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீா் அதிகமாக தேங்கியுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் சுமாா் 12 மணி முதல் சுமாா் அரை மணி நேரம் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.