ராஜபாளையத்தில் பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை சாலையோரப் பள்ளத்தில் பேருந்து சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராஜபாளையத்தில் பேருந்து பள்ளத்தில்  சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை சாலையோரப் பள்ளத்தில் பேருந்து சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் நகா்ப்பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பணிகள் நிறைவடைந்து சாலைகள் போடப்பட்டுள்ளன. சில இடங்களில் குழிகள் சரிவ மூடப்படாத நிலை உள்ளது. இந்நிலையில், சத்திரப்பட்டி சாலையில் சென்ற தனியாா் பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது. ராஜபாளையம் பகுதி முழுவதும் சாலைகள் பள்ளம் மேடாக காட்சிதரும் நிலையில் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனா். அதிகாரிகள் உடனடியாக சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com