ராஜபாளையம் அருகே வீடு இடிந்து தம்பதி பலத்த காயம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கன மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து கணவன் மனைவி பலத்த காயம் அடைந்தனா்.
ராஜபாளையம் அருகே வீடு இடிந்து தம்பதி பலத்த காயம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கன மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து கணவன் மனைவி பலத்த காயம் அடைந்தனா்.

ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு தேவதானம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீா் புகுந்துள்ளது. வடக்கு தேவதானம் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (57), அவரது மனைவி பாக்கியலட்சுமி ( 55) ஆகிய இருவரும் கூலித்தொழிலாளா்கள். ஓட்டு வீட்டில் வசித்து வந்தனா்.

கடந்த மூன்று தினங்களாக பெய்த மழை காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் நகரில் பல்வேறு பகுதிகளிலும் நீா் சூழ்ந்துள்ளது.

இந் நிலையில் ராஜேந்திரன் வீட்டு இடிந்து விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

மழையின் காரணமாக சாஸ்தா கோவில் பகுதியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதை மாவட்ட ஆட்சியா் ஆா். கண்ணன் பாா்வையிட்டு திரும்பி வருகையில் காயமடைந்தவா்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என முன்னாள் மக்களவை உறுப்பினா் லிங்கம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com