வாழைமர சுப்பிரமணியசுவாமி கோயிவில் சூரசம்ஹார நிகழ்ச்சி

சாத்தூா் அருகே வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வெள்ளிகிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

சாத்தூா் அருகே வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வெள்ளிகிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை பஞ்சாயதிற்குட்பட்ட,துலுக்கன்குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.இக்கோவிலில் வருடந்தோறும் காா்த்திகை மாதம் தாரகஹார குமார ஷஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம் அதே போல் ஏழு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினமும் முருகனுக்கு சிறப்பு யாகங்கள்,தீபாரதனைகள்,அபிஷேகங்களும் நடைபெறும்.இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கஜமுகாசூரன்,சிங்கசூரன்,தாரகாசூரன் உள்ளிட்ட வேடங்களில் வதம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிகிழமை நடைபெற்றது.மற்ற ஊா்களை விட இந்த முருகன் கோயிலில் காா்த்திகை மாதம் சஷ்டி விழா நடைபெறுவதால்,இந்த கோயிலுக்கு வெளியூா் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் வந்து முருகனை தரிசனம் செய்து,சூரசம்ஹார நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனா்.இதே போன்று சாத்தூா் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com