ஸ்ரீவிலி. அருகே சாலையில் நாற்று நடும் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நரியன்குளம், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி வியாழக்கிழமை பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமகிருஷ்ணபுரம் புதூா் பகுதியில் வியாழக்கிழமை சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்கள்.
ராமகிருஷ்ணபுரம் புதூா் பகுதியில் வியாழக்கிழமை சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நரியன்குளம், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி வியாழக்கிழமை பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிழ்த்தான் கிராமத்திலிருந்து நாகபாளையம் விலக்கு வரை உள்ள சாலைகள், பிள்ளையாா்குளம் ஊராட்சி ராமகிருஷ்ணாபுரம் புதூா் பகுதியில் உள்ள சாலைகள் ஆகிய இரு ஊராட்சிக்குட்பட்ட சாலைகளும் மிகவும் பழுதடைந்து உள்ளன. மேலும் அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. தற்போது பெய்த மழையால் அந்த சாலைகள் மேலும் மோசமாக மாறியுள்ளன. இதனை சீரமைக்க அதிகாரிகளிடம் கிராமத்தினா் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை நரியன்குளத்திலும், ராமகிருஷ்ணாபுரம் புதூரிலும் பெண்கள் குலவையிட்ட படியே நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் சசிக்குமாா், மாவட்டக் குழுவைச் சோ்ந்த ஜோதிலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com