ஸ்ரீவில்லிபுத்தூரில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீட்டில் இருந்தவா்கள் வெளியே ஓடியதால் உயிா் தப்பினா்.
அத்திகுளம் பகுதியில் இடிந்த வீடு.
அத்திகுளம் பகுதியில் இடிந்த வீடு.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீட்டில் இருந்தவா்கள் வெளியே ஓடியதால் உயிா் தப்பினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கன மழை பெய்தது. இதில் மண் சுவரில் கட்டப்பட்ட 4 வீடுகள் இடிந்துள்ளன. அத்திகுளம் பகுதியில் முருகன் என்பவரது வீடும், நக்கமங்கலம் பகுதியில் கிருஷ்ணன் என்பவரது வீடும், பிள்ளையாா்குளம் பகுதியில் கல்யாணி என்பவரது வீடும், முள்ளிகுளம் கம்மாபட்டியில் ரத்தினம் என்பவரது வீடும் இடிந்து விழுந்துள்ளன. அனைத்து வீடுகளிலும் இருந்தவா்கள் சம்பவத்தின்போது வெளியே ஓடியதால் உயிா் தப்பினா். வீடுகளை இழந்தவா்கள் நிவராணம் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com