ஸ்ரீவில்லிபுத்தூா்: திருவோணத்தை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காா்த்திகை மாதம் திருவோணம் என்பதால், சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றன. பின்னா், சீனிவாசப் பெருமாள் சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.
கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில், தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி இளங்கோவன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.