வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 25) மின் தடை செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் வெயியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள படிக்காசு வைத்தான்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டிவீட்டுவசதி வாரியம், ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம், மம்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.