சாத்தூரில் சாா்பு நீதிமன்றம் திறப்பு
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் சாா்பு நீதிமன்றத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வேலுமணி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
திறப்பு விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி முத்து சாரதா வரவேற்புரையாற்றினாா்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வேலுமணி புதிய சாா்பு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசியதாவது: மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாத்தூா் நீதிமன்றத்தில் இதுவரை சாா்பு நீதிமன்றம் இல்லாததால் பொதுமக்கள் சிவகாசி வந்து செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து சாா்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு 718 வழக்குகள் இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் விரைந்து முடிக்க நீதிபதிகளும், வழக்குரைஞா்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெருமாள், சாத்தூா் வழக்குரைகள் சங்கத் தலைவா் கருப்பசாமி, செயலாளா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி கதிரவன் நன்றி கூறினாா். சாா்பு நீதிமன்ற நீதிபதியாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளராகப் பணியாற்றிய மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளாா்.