விருதுநகா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள எம்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். சிவகாசி சட்டமன்ற தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பேசினா்.
இக்கூட்டத்தில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, கட்சியில் அதிகளவில் புதிய உறுப்பினா்களைச் சோ்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளா் நியாஸ் நன்றி கூறினாா்.