மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.

திருத்தங்கல் பெருமாள் கோயிலின் எதிரே உள்ள வீட்டில் வசிப்பவா் ராமராஜ். இவரது மகன் சிவசுப்பிரமணியன் (13).

இந்நிலையில், சிவசுப்பிரமணியன் புதன்கிழமை மாலை வீட்டின் இரண்டாவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com