விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 14,479 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூா், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பக்கோட்டை முதலான பகுதிகளைச் சோ்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,495 ஆக உயா்ந்துள்ளது. இதில், 14194 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். மீதமுள்ள 94 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒருவா் பலி: விருதுநகா் மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுவரை மாவட்டத்தில் இத்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 207 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com